யாழ்.திருநெல்வேலி பகுதியில் பாடசாலை மாணவியொருவர் மீது நேற்று இளைஞன் ஒருவன் கன்னத்தில் அறைந்ததாக மாணவியின் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
மாணவி பாடசாலை முடிந்து திருநெல்வேலி பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த வேளை வீதியின் வழியில் மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த இளைஞன் மாணவியினை இடை மறித்துள்ளான்.
அதேவேளை குறித்த மாணவி நிற்காமல் சென்றதினையடுத்து மாணவியின் துவிச்சக்கர வண்டியினை இழுத்து மாணவியினைத் தடுத்து நிறுத்தி மாணவியின் கன்னத்தில் அறைந்ததுடன் துவிச்சக்கரவண்டியின் காற்றுக்களையும் திறந்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பித்துச் சென்றுள்ளான்.
தொடர்ந்து இது தொடர்பாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்தமையினையடுத்து பெற்றோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, May 13, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கும் நன்னாளாய் கொண்டாடப்படும் தீப திருநாளாம் தீபாவளி பண்டிகையையொட்டி இணையத்தள வாசகர்கள் அன...
-
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறிய...
-
இத்தாலி நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 17 பேர் பலியானதாகவும், 200க்கும் மேற்பட்...
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடன் எதிர்கட்ச்சிகளின் பொது வேற்பாளர் மைதிரிபால சிரிசேன பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது...

No comments:
Post a Comment
Leave A Reply