முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்றி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை.
58 லட்சம் மக்கள் மஹிந்த ராஜபக்சவிற்கு வாக்களித்துள்ளனர்.
அன்னப்பட்சிக்கு வாக்களித்த பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். மீண்டும் மஹிந்தவிற்கு வாக்களிப்பதற்காக காத்திருக்கின்றார்கள்.
மஹிந்த ராபஜக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் நானும் தேர்தலில் போட்டியிடுவேன்.
அமைச்சுப் பதவிகள் இன்றி இருப்பதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது.
அமைச்சுப் பதவி எங்களுடன் ஒட்டிக் கொண்ட விடயமல்ல. எனவே பதவி இன்றி இருப்பதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த குறுகிய நேர் காணலில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, February 22, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னி...

No comments:
Post a Comment
Leave A Reply