அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒர் இனவாதி என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும், கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான தயா கமகே தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் பாசறையிலிருந்து உருவான இனவாதியே ரவூப் ஹக்கீம் என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள இனவாதத்தை தூண்டக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளரே ரவூப் ஹக்கீம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெய்யான நோக்கில் பொது வேட்பாளருக்கு ஹக்Pகீம் ஆதரவளிக்கவில்லை எனவும், அவ்வாறான ஓர் நிலையமையிலும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக மற்றும் வடிகலமைப்பு அமைச்சு அவருக்கு வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய முதலமைச்சர் சஹிர் அஹமட் இரண்டரை ஆண்டுகளாக மாகாணசபையில் அங்கம் வகித்த போதிலும் மக்களுக்கு எவ்வித சேவையும் ஆற்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஒருவர் முதலமைச்சராக வரக்கூடாது என ஹக்கீம் குறிப்பிட்டுள்ளதாகத் தெரவித்துள்ளார்.
30 ஆண்டுகள் யுத்தம் காரணமாக நாடு பாரியளவு பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகவும், எதிர்காலத்தில் பிரிவிவினைவாதம் தலைதூக்குவதனை எவரும் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரவூப் ஹக்கீம் இனவாத நிலைப்பாட்டை கைவிட்டுச் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, February 25, 2015
ஹக்கீம் இனவாதி! மஹிந்தவின் ஆதரவாளரே அவர்!! - பாய்கிறார் தயா கமகே
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...

No comments:
Post a Comment
Leave A Reply