கடந்த வருடம் காணாமல் போன மலேசியா எயார்லைன்ஸ் எம்.எச். 370 விமானம் அண்டார்டிகாவை நோக்கிப் பயணித்திருக்கலாம் என புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமன்றி விமானிகளின் அறையில் இருந்த ஒருவர் வேண்டுமென்றே விமானத்தை அண்டார்டிகாவை நோக்கிப் பயணிக்க வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தின் செய்மதி தரவுகளை ஆராய்ந்த நிபுணர்களே இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆவணப் படமொன்றும் வெளியாகவுள்ளது.
எம்.எச். 370 விமானமானது அதன் இறுதி வானொலி அழைப்பின் பின்னர் 3 தடவை திரும்பியுள்ளதாகவும் இதன் விளைவாக தெற்கில் அண்டார்டிகாவை நோக்கிப் பயணித்துள்ளதாக தடயங்களை ஆராய்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும் விமானம் பல மணித்தியாலத்துக்கு பறந்துள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி 239 பேருடன் குறித்த விமானம் காணாமல் போனது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, February 24, 2015
மாயமான எம்.எச். 370 விமானம்!!! புது தகவல்!!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னி...

No comments:
Post a Comment
Leave A Reply