கடந்த வருடம் காணாமல் போன மலேசியா எயார்லைன்ஸ் எம்.எச். 370 விமானம் அண்டார்டிகாவை நோக்கிப் பயணித்திருக்கலாம் என புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமன்றி விமானிகளின் அறையில் இருந்த ஒருவர் வேண்டுமென்றே விமானத்தை அண்டார்டிகாவை நோக்கிப் பயணிக்க வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தின் செய்மதி தரவுகளை ஆராய்ந்த நிபுணர்களே இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆவணப் படமொன்றும் வெளியாகவுள்ளது.
எம்.எச். 370 விமானமானது அதன் இறுதி வானொலி அழைப்பின் பின்னர் 3 தடவை திரும்பியுள்ளதாகவும் இதன் விளைவாக தெற்கில் அண்டார்டிகாவை நோக்கிப் பயணித்துள்ளதாக தடயங்களை ஆராய்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும் விமானம் பல மணித்தியாலத்துக்கு பறந்துள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி 239 பேருடன் குறித்த விமானம் காணாமல் போனது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, February 24, 2015
மாயமான எம்.எச். 370 விமானம்!!! புது தகவல்!!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனமும் சாய்ந்தமருது இணையத்தளமும் இணைந்து மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை இன்று நடாத்தியது.
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
-
திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியில் இக்பால் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரி...
-
வவுனியா பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஆசிரியர் அடித்ததில் மயக்கமடைந்த மாணவி ஒருவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply