அட்டாளைச்சேனை கடற்கரை சிறுவர் பூங்கா இனந்தெரியாத நபர்களினால் நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே இந்த கடற்கரை சிறுவர் பூங்கா இனந்தெரியாத சில விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை கேள்வியுற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் குறிப்பிட்ட இடத்துக்கு உடனடியாக விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டார்.
அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்:
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த கடற்கரைப் பூங்காவானது எனது கட்டுப்பாட்டின் கீழுள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த கடற்கரை சிறுவர் பூங்கா சில வாரங்களின் பின்னர் முடிவுற்று பொதுமக்களின் பாவனைக்காக விடும் நிலைமையில் உள்ளதை சகிக்க முடியாத சில நாசகாரர்கள் இதை செய்திருக்கின்றனர்.
இந்த செயலில் ஈடுபட்ட அனைவரையும் கண்டுபிடித்து அவர்களை சட்டத்துக்கு முன்னிறுத்தி உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளப்போவதாகவும் கூறினார்.
இச்சம்பவம் இடம்பெற்ற தினம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஊரில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, January 12, 2015
அட்டாளைச்சேனை கடற்கரை பூங்கா இனம்தெரியாதோரால் உடைப்பு!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
சர்வதேச குற்றம் என்பதால் மலேசிய விமானம் விழுந்து நொறுங்கி கிடக்கும் இடத்தில் உள்ள தடயங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அழித்து வருகின்றனர...
-
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மன்னார் மற்றும் நெடுந்தீவுக் கடற்பகுதிகளில்...
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார கட்-அவுட் ஒன்றை வைக்க அவரது ஆதரவாளர்கள் எடுத்த முயற்சிக்கு எதிர்ப்பை தெரிவித்த ஒருவரது வீடு ...
No comments:
Post a Comment
Leave A Reply