அட்டாளைச்சேனை கடற்கரை சிறுவர் பூங்கா இனந்தெரியாத நபர்களினால் நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே இந்த கடற்கரை சிறுவர் பூங்கா இனந்தெரியாத சில விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை கேள்வியுற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் குறிப்பிட்ட இடத்துக்கு உடனடியாக விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டார்.
அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்:
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த கடற்கரைப் பூங்காவானது எனது கட்டுப்பாட்டின் கீழுள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த கடற்கரை சிறுவர் பூங்கா சில வாரங்களின் பின்னர் முடிவுற்று பொதுமக்களின் பாவனைக்காக விடும் நிலைமையில் உள்ளதை சகிக்க முடியாத சில நாசகாரர்கள் இதை செய்திருக்கின்றனர்.
இந்த செயலில் ஈடுபட்ட அனைவரையும் கண்டுபிடித்து அவர்களை சட்டத்துக்கு முன்னிறுத்தி உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளப்போவதாகவும் கூறினார்.
இச்சம்பவம் இடம்பெற்ற தினம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஊரில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, January 12, 2015
அட்டாளைச்சேனை கடற்கரை பூங்கா இனம்தெரியாதோரால் உடைப்பு!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னி...

No comments:
Post a Comment
Leave A Reply