நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து போலியோவினால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுனவில, ஸ்டேன்லி ஜோசப் மாவத்தையைச் சேர்ந்த சிரிவர்தன ஹதன்கே செல்டன் காமினி என்ற 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் பலியானவராவார்.
இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் இத்தாலியில் வசித்து வருகின்றனர். குறித்த நபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இத்தாலியிலிருந்து நாடு திரும்பியுள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அவரது காலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து மரணமாகியுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொட்ரபாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, April 10, 2014
நீர்கொழும்பு வைத்தியசாலையின் 4ஆவது மாடியிலிருந்து வீழ்ந்தவர் பலி
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பந்து வீச்சாளர்களின் சவாலை எதிர்கொள்ள இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தயார்நிலையில் உள்ளதாக இலங்கை அணியின் ஆலோ...
-
இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கங்கை நதியை தூய்மைப்படுத்ததும் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த தொடங்கியுள்ளது.
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
No comments:
Post a Comment
Leave A Reply