blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, September 7, 2014

ஆந்திர கடல் எல்லைக்குள் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் ஐவர் கைது

ஆந்திர கடல் எல்லைக்குள் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் ஐவர் கைது!இந்தியாவின் ஆந்திர கடல் பகுதியில் மீன் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 5 இலங்கை மீனவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இவர்கள் ஐவரும் ஆந்திர மாநிலம் காக்கிநாடா கடல் பகுதியில் கடந்த வியாழக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் அவர்களின் இயந்திரப் படகையும், பிடித்து வைத்திருந்த 300 கிலோ மீன்களையும் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர் என்றும் கூறப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சென்னை துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►