அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதனடிப்படையில்,
சர்வதேச போர்க்குற்ற விசாரணை குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்ற
நிலைப்பாட்டை இலங்கை இன்றும் மீண்டும் வலியுறுத்துவதாக ஜெனிவாவுக்கான
இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெறும் 27வது அமர்வில் நேற்று உரையாற்றிய இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இதனை வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும் இலங்கை தொடர்ந்தும் சர்வதேசத்துடன் இணைந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக
அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் கொண்டு வந்து நிறைவேற்றிய பிரேரணையை
இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதாகவும் ரவிநாத் ஆரியசிங்க குறிப்பிட்டார்.
இதேவேளை
இலங்கை அரசாங்கம் போர் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை தொடரவுள்ளதாகவும்,
சாட்சி பாதுகாப்பு பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும்
ரவிநாத் ஆரியசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments:
Post a Comment
Leave A Reply