கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரகாபொல பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேன் ஒன்றும் பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்மாந்துறை பகுதியில் இருந்து கொழும்பில் பாஸ்போர்ட் உட்பட சில அலுவல்களை செய்ய வந்த முஸ்லிம்களே இதில் வபாத்தாகி உள்ளதாக தெரிய வருகின்றது.
மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறு குழந்தை ( இரண்டரை வயது, 29, 26 வயது பெண்கள் உட்பட சாரதி ஆகிய ஐவர் இந்த விபத்தில் பலியாகியுள்ளதாகவும் பலர் காயமடைந்து உள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் வரகாபொல, கேகல்ல, கொழும்பு, நிட்டம்புவ வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தானது, வேகத்தினைக் கட்டுப்படுத்த முடியாமையினால் ஏற்பட்டதாக உதவி பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, December 30, 2015
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து; ஐந்து பேர் பலி (படங்கள்)
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னி...




No comments:
Post a Comment
Leave A Reply