திருகோணமலையிலுள்ள ‘கோட்டா’ தடுப்புமுகாம் பற்றிய தகவல் உட்பட வடக்கு, கிழக்கில் காணாமற்போனோர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டிய விடயங்களை தான் ஜனாதிபதியின் கவனத்துக்கு உடன் கொண்டுவருவார்
என்று பொதுமக்கள் பாதுகாப்பு அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சாட்சிகள் பாதுகாப்புத் தொடர்பிலான சட்டவரைபு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“வடக்கு, கிழக்கில் காணாமற்போனோர் தொடர்பிலும் கோட்டா முகாம் பற்றியும் சுரேஷ் எம்.பி. குறிப்பிட்டிருந்தார்.
இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் விடயங்களாகும். எனவே, அது பற்றித்தான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வருவேன்” என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பிலும் மீள் விசாரணை ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, February 20, 2015
கோட்டாவின் இரகசிய முகாம்!!! படுகொலைகள் தொடர்பிலும் மீள் விசாரணை ஆரம்பிக்கப்படும்!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிலோன்டொபாகோ நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த...
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 ஓட்டங்களால் வெற்றியீட்ட...
No comments:
Post a Comment
Leave A Reply