திருகோணமலையிலுள்ள ‘கோட்டா’ தடுப்புமுகாம் பற்றிய தகவல் உட்பட வடக்கு, கிழக்கில் காணாமற்போனோர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டிய விடயங்களை தான் ஜனாதிபதியின் கவனத்துக்கு உடன் கொண்டுவருவார்
என்று பொதுமக்கள் பாதுகாப்பு அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சாட்சிகள் பாதுகாப்புத் தொடர்பிலான சட்டவரைபு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“வடக்கு, கிழக்கில் காணாமற்போனோர் தொடர்பிலும் கோட்டா முகாம் பற்றியும் சுரேஷ் எம்.பி. குறிப்பிட்டிருந்தார்.
இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் விடயங்களாகும். எனவே, அது பற்றித்தான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வருவேன்” என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பிலும் மீள் விசாரணை ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, February 20, 2015
கோட்டாவின் இரகசிய முகாம்!!! படுகொலைகள் தொடர்பிலும் மீள் விசாரணை ஆரம்பிக்கப்படும்!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனமும் சாய்ந்தமருது இணையத்தளமும் இணைந்து மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை இன்று நடாத்தியது.
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
-
திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியில் இக்பால் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரி...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...

No comments:
Post a Comment
Leave A Reply