போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாதுஎன பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆனால், தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் உள்ளூரில் நியாயமான விசாரணைகளை நடத்துவதற்கு தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்காகப் பங்களிப்பு செய்த எவரையும், சர்வதேச விசாரணையொன்றின் பாதிப்புக்கு உட்படாத வகையில் பாதுகாப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டு உரையாற்றும் போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply