ஆளும் கட்சியில் அங்கம் வகித்த போதிலும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்குஆதரவளிப்பது என்பது தொடர்பில் தமது கட்சி இன்னமும் முடிவு செய்யவில்லை என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலர் ஹசன் அலி மீண்டும் கூறியுள்ளார்.
நாம் சிறுபான்மை மக்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சி என்றவகையில் பெரும்பான்மை கட்சிகளின் விருப்பத்துக்கு அடிபணிந்து செயல்பட முடியாது, அதனால்தான் ஆளும் கட்சியில் அங்கம் வகித்த போதிலும் இன்னும் முடிவெடுக்க வில்லை .
எனக்கு ஆளும் தரப்பு தந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்ற ஆதங்கத்தில் முடிவெடுக்காமல் இருக்கிறோம் , அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
அதேபோன்று வெளிவந்துள்ள இன்றைய அரசியல் மாற்றத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவசரப்பட்டு எமது முடிவை தெரிவிப்பதற்கு இல்லை , முதலாவது எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனம் எப்படி இருக்கப் போகிறது என்பது பற்றி பார்க்க வேண்டியிருக்கிறது, சிறுபான்மையினரின் பிரச்சினை தொடர்பில் குறிப்பாக இன பிரச்சினை தொடர்பில் அவரின் நிலைப்பாடு என்ன, அவர் முன்வைக்கும் தீர்வு என்ன என்பது பற்றி பார்க்க வேண்டியுள்ளது , அதை மையமாக வைத்துதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவை எடுக்கும் என தெரிவித்துள்ளார் .
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, November 22, 2014
பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி பார்க்க வேண்டியுள்ளது: முஸ்லிம் காங்கிரஸ்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
மஹிந்த அரசின் அமைச்சரவையில் பல முக்கிய மாற்றங்கள் அடுத்துவரும் ஓரிரு நாட்களில் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று கட்சி வட்டாரங்களை ம...
-
வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் அருகில் ஒட்டப்பட்டிருந்த ஜனாதிபதி அவர்களின் சுவரொட்டிகளுக்கு சாணகம் வீசப்பட்டுள்ளது....
-
கனேமுல்ல பஹல யாகொட பகுதியில் துணி வியாபாரி ஒருவரிடம் கப்பம் கோரி மரண அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே
No comments:
Post a Comment
Leave A Reply