முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற கரப்பந்தாட்டப் போட்டி ஒன்றுக்கு மத்தியஸ்தம் வகித்த கிளிநொச்சியைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த ஆசிரியர் போட்டி மத்தியஸ்தம் வகித்தபோது தனது கழுத்தில் புலிகளது சின்னம் பொறிக்கப்பட்ட பட்டியை அணிந்திருந்தார் என்ற காரணத்தாலேயே கைதுசெய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாணக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாண விளையாட்டுப் போட்டிகள் இம்முறை முல்லைதீவில் நடைபெற்று வருகின்றன.
இந்தப்போட்டிகளில் இன்று சனிக்கிழமை கரப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன.
குறித்த விளையாட்டுப் போட்டியில் மத்தியஸ்தம் வகிக்கச் சென்றிருந்த கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட பயிற்றுநரான எஸ்.சதீஸ்குமார் (வயது - 40) என்பவர் விடுதலைப்புலிகளின் விளையாட்டுதுறையினால் வழங்கப்பட்ட கழுத்துப்பட்டியை அணிந்திருந்தார் என்றும் அதில் 'விளையாட்டு பேரவை தமிழீழம்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply