இரண்டு
கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டவந்த ஐந்து
பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் மர்ம உறுப்புக்களில் மறைத்து தங்கத்தை கடத்தியிருந்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரியிலிருந்து சந்தேகநபர்களான பெண்கள் சுமார் மூன்று கிலோகிராம் நிறையுடைய தங்கத்தை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவந்துள்ளனர்.
குறித்த ஐந்து பெண்களும் கொழும்பு கிரான்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.


No comments:
Post a Comment
Leave A Reply