
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் தற்போது உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளன.
இந்நிலையிலேயே மொனராகல மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் இவ்வாறு பெண்கள் பயன்படுத்தும் 2 இலட்சம் கைப் பைகளில் தேர்தலில் அவரின் விருப்பு இலக்கத்தை அச்சிட்டு விநியோகித்துள்ளார் என்று அந்த அமைப்பகள் தெரிவித்துள்ளன.
இந்தக் கைப் பைகள் மௌதகம, நொச்சியாகம பகுதிகளில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மொனராகல மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான 'கபே' இன் தலைவர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
அத்துடன் இது தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
No comments:
Post a Comment
Leave A Reply