மேற்கு வங்காளத்தில் ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு
கொலையும் செய்த மூன்று குற்றவாளிகளை கிராமத்தினர் நிர்வாணமாக கட்டி வைத்து
கடுமையாக தாக்கியதால் ஒருவர் மரணம் அடைந்ததாகவும், மேலும் இருவர் உயிருக்கு
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்
திடுக்கிடும் தகவல் ஒன்று கூறுகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் கலியாபசர் என்ற கிராமத்தில் ஏழு வயது சிறுமியை
மூன்று நபர்கள் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பின்னர்
அந்த சிறுமியை மரம் ஒன்றில் தூக்கில் தொங்க செய்துள்ளனர். இவர்களில் ஒருவர்
சாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த கிராமத்தினர் கடும் அதிர்ச்சியும்
ஆத்திரமும் அடைந்தனர். சுமார் 50 பேர் கொண்ட கும்பல் ஒன்று சிறுமியை
பாலியல் பலாத்காரம் செய்த மூன்று நபர்களையும் பிடித்து, நிர்வாணப்படுத்தி
சிறுமி தூக்கில் தொங்கிய அதே மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக
அடித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் தாக்கியதால் ஒருவர் சம்பவ
இடத்திலெயே மரணம் அடைந்தார். மேலும் இருவர் படுகாயத்துடன் உயிருக்கு
போராடியவாறே இருந்தனர்.
இந்நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட போலீஸார்
விரைந்து வந்து காயமடைந்தவர்களை கிராமத்தினர்களின் இருந்து மீட்டு
மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
படுகாயம் அடைந்த இருவரும் இன்னும் அபாய
கட்டத்தை தாண்டவில்லை.
இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்த பொலிஸ் அதிகாரி சிறுமியின் பாலியல்
பலாத்காரம் குறித்து சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார் என்றும்,
மருத்துவமனையில் இருக்கும் குற்றவாளிகள் நினைவு திரும்பியதும் அவர்களிடம்
விசாரணை செய்யப்படும் என்றும் கூறினார்.
மேலும், மூன்று பேர்களையும்
மிருகத்தனமாக தாக்கிய கிராமத்தினர்களை அடையாளம் காணும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
மொனார்ச் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்ச்சி அண்மையில்( 2/1/16 ) ஆசாத் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது செக்றோ ஸ்ரீலங்கா அமைப்...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
பரிசுத்த பாப்பரசர் சற்று நேரத்துக்கு முன்னர் கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
-
பருப்பு மற்றும் சீனி ஆகிய பொருட்களுக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்த...
No comments:
Post a Comment
Leave A Reply