மொனார்ச் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்ச்சி அண்மையில்( 2/1/16 ) ஆசாத் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவரும், மொனார்ச் பாலர் பாடசாலையின் பணிப்பாளருமான கவுன்சலர் றினோஸ் ஹனீபா
தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னால் கல்விப்பணிப்பாளர் எம்.பி.எச் முஹமட் கலந்து கொண்டார், விஷேட அதிதிகளாக பிரபல சமூக சேவகர் தேசமானிய்ய ஜவ்பர் ஹாஜியார், மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ஜிப்ரி, முன்னால் பிரதேச சபை உறுப்பினர் அஸீஸ், சட்டத்தரணி எம்.சி ஆதம்பாவா, கல்முனை பிரதேச செயலகத்தின் மனிதவள உத்தியோகத்தர் ஓ.கே றிஸ்வி, சமூக சேவகரும் மரத்தளபாட உரிமையாளர் நாசர், முன்னால் விளையாட்டத்துறை விரிவுரையாளர் முஸ்தபா ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வினை செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உபதலைவர் ஸாஹிர் கரீம் மற்றும் பொதுச் செயலாளர் அனீஸ், பொருலாளர் நியாஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினர். மொனார்ச் பாலர் பாடசாலையானது செக்றோ ஸ்ரீலங்காவின் பாலர் பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
Leave A Reply