blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, September 9, 2014

ஐ.நா. விசாரணை குறித்த இலங்கையின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை!

ஐ.நா. விசாரணை குறித்த இலங்கையின்  நிலைப்பாட்டில் மாற்றமில்லை!ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் விசாரணைகள் குறித்த தனது நிலைப்பாட்டில் மாற்றமெதுவும் இல்லை என தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம் மனித உரிமை பாதுகாவலர்கள் பழிவாங்கப்படுகின்றனர் என வெளியான குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலின் 27ஆவது அமர்வில் உரையாற்றிய தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

புதிய ஆணையாளர் நியமனத்தை வரவேற்றுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

சர்வதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்தும் பேச்சுக்களை மேற்கொண்டுள்ளது, எனினும் சர்வதேச விசாரணையை கோரும் மார்ச் மாத பிரேரணையை நிராகரிக்கின்றது.

யுத்த கால கரிசனைகள் குறித்த விடயங்களுக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம் தொடர்ந்தும் உள்ளூர் பொறிமுறைகளை பயன்படுத்தும் சாட்சி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகள் அதன் ஆணையை மீறுவதுடன் உள்ளூர் பொறிமுறையை முற்றுமுழுதாக மதிக்காததாக காணப்படுகின்றது.  இது நல்லிணக்கத்தை பாதிக்கிறது - என குறிப்பிட்டுள்ளார்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►