சுமார் இரண்டரைக் கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொத்துவில்
மற்றும் அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிடத் தொகுதிகள் இன்று திறந்து
வைக்கப்பட்டன.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலக்ஸ்ராஜா தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் அதிதிகளாக
கலந்து கொண்டு அவற்றை திறந்து வைத்தனர்.
அத்துடன் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான
எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் பைசால் காசீம் ஆகியோர் உட்பட சட்டத்தரணிகளும்
அதிகாரிகளும் பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
Leave A Reply