blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, April 1, 2014

இலங்கை 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


சிட்டகாங்: உலகக்கோப்பை டி20 இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடர்ந்த இலங்கை அணி நியூசலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. கடைசியில் அந்த அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதைத் தொடர்ந்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் அனைத்து வீரர்களும் சொதப்பியதால் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

எனவே இலங்கை 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதியிலும் நுழைந்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் வில்லியம்சன் மட்டும் 42 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் ஹெராத் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►