நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து போலியோவினால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுனவில, ஸ்டேன்லி ஜோசப் மாவத்தையைச் சேர்ந்த சிரிவர்தன ஹதன்கே செல்டன் காமினி என்ற 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் பலியானவராவார்.
இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் இத்தாலியில் வசித்து வருகின்றனர். குறித்த நபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இத்தாலியிலிருந்து நாடு திரும்பியுள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அவரது காலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து மரணமாகியுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொட்ரபாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, April 10, 2014
நீர்கொழும்பு வைத்தியசாலையின் 4ஆவது மாடியிலிருந்து வீழ்ந்தவர் பலி
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
239 பேருடன் பீஜிங் சென்றபோது நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு சில நாளில் முடிவு தெரிந்த...
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
2012 பெல்ஜியம் அழகிப் போட்டியில் தேர்வான லிண்டஸே வான் கிளே தற்போது இஸ்லாத்தை தழுவியுள்ளார்.
-
அக்கரைப்பற்று பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான களஞ்சிய சாலை ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு கைப...
No comments:
Post a Comment
Leave A Reply