அக்கரைப்பற்று பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான களஞ்சிய சாலை ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது முன்னாள் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்காளால் பொது மக்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சைக்கிள்களே நேற்று மாலை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த களஞ்சிய சாலை போலீசாரல் சுற்றிவளைக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply