1996ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் தெஹிவளை ரயில் நிலைய
குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலி
அமைப்பின் சந்தேகநபர்கள் இருவருக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது
சந்தேகநபர்கள் தமது குற்றத்தை நீதிமன்றில் ஒப்புக் கொண்டுள்ளனர்.
விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி
பெரேரா குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்னதாக சுமார் 20 வருடங்கள்
விளக்கமறியலில் இருந்துள்ளதால், 2 வருடங்கள் தளர்த்தப்பட்ட
சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், தண்டனைக் காலம் முடிந்ததும் ஒரு வருடம் வவுனியா பூந்தோட்டம்
புனர்வாழ்வு முகாமுக்கு இவர்கள் அனுப்பப்பட வேண்டும் எனவும் அவர் தனது
தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிலருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply