blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, March 15, 2016

தெஹி­வளை ரயில் நிலையத்தில் குண்டுத் தாக்­குதல் ; இரு­வ­ருக்கு சிறைத்­தண்­டனை

1996ஆம் ஆண்டு இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் தெஹி­வளை ரயில் நிலைய குண்டுத் தாக்­குதல் சம்­பவம் தொடர்பில், தமி­ழீழ விடு­தலைப் புலி அமைப்பின் சந்­தே­க­ந­பர்கள் இரு­வ­ருக்கு 2 வரு­டங்கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.


குறித்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது சந்­தே­க­ந­பர்கள் தமது குற்­றத்தை நீதி­மன்றில் ஒப்புக் கொண்­டுள்­ள­னர்.

விட­யங்­களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி ஐ­ராங்­கனி பெரேரா குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்கள் முன்­ன­தாக சுமார் 20 வரு­டங்கள் விளக்­க­ம­றி­யலில் இருந்­துள்­ளதால், 2 வரு­டங்கள் தளர்த்­தப்­பட்ட சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்ளார்.

மேலும், தண்­டனைக் காலம் முடிந்­ததும் ஒரு வருடம் வவு­னியா பூந்­தோட்டம் புனர்­வாழ்வு முகா­முக்கு இவர்கள் அனுப்­பப்­பட வேண்டும் எனவும் அவர் தனது தீர்ப்பில் குறிப்­பிட்­டுள்ளார்.

முன்­ன­தாக, இந்த தாக்­குதல் சம்பவம் தொடர்பில் சிலருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►