அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கை முதற்கட்டமாக கொழும்பில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
கொழும்பு, கொம்பனிவீதியில் அமைந்துள்ள விசும்பாயவின் ஊடாக மக்கள் கருத்துக்களை உள்வாங்கு நடவடிக்கை இடம்பெறும் என அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்கள் கருத்துக்களை உள்வாங்கும் குழு தெரிவித்துள்ளது.
காலை 09.30 மணிமுதல் 4.30 மணிவரை பொது மக்கள் ஆலோசனை வழங்க முடியும் என்றும் இதில் அனைத்து பொது மக்களும் இணைந்து கொள்ளுமாறும் அந்தக் குழு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
இது தொடர்பாக 0112 437 676 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் 0112 328 780 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் பொது மக்கள் ஆலோசனை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply