blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, January 10, 2016

தன்னை கொலை செய்ய வந்த நபரை விடுவித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மன்னிப்பளிக்கப்பட்ட,  தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர், தன்னுடைய சொந்த ஊரான யாழ்ப்பாணம் கோப்பாய்க்கு, நேற்று சனிக்கிழமை திரும்பினார்.

தன்னை படுகொலைச் செய்வதற்கு முயன்றார் என்று குற்றச்சாட்டப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெள்ளிக்கிழமை (8) மன்னிப்பளித்தார்.

மைத்திரிபால சிறிசேன, மகாவலி அமைச்சராக இருக்கும் போதே, இந்த நபர், பொலன்னறுவை பகுதியில் வைத்து கடந்த 2006ஆம் ஆண்டு படுகொலை செய்ய முயன்றார் என்று அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►