பிரதமர் நரேந்திர மோடியின் தூய இந்தியத்திட்டத்திற்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொள்வதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.இந்த திட்டத்தை அரசியல் நடவடிக்கையாக கருதாமல் சமூக நோக்கத்துடன் நோக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் அனைத்து மக்களும் இந்த சமூக நல திட்டத்துடன் இணைந்து இயன்ற உதவிகளை வழங்குமாறும் தென்னி்ந்திய திரைப்பட நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பொது வேலைத்திட்டத்தில் தாமும் அங்கம் வகிப்பதை முன்னிட்டு தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
இந்த தூய்மை இந்தியா திட்டத்திற்கான தனது சவாலை ஏற்றுக் கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் பிரபலங்கள் சிலருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் தமிழக நடிகர் கமல்ஹாசன் ,கிரிக்கட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்ட பலர் இதில் அடங்குகின்றனர் .
இதற்கு தமது ஆதரவை வழங்குவதாக நடிகை பிரியங்கா சொப்ராவும் தமது டுவிட்டர் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் அனைவருக்கும் முன்னுதாரணமாக நரேந்திர மோடியும் டில்லி வால்மிகி மந்திர் பகுதியில் வீதியை துப்பரவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply