ஆபிரிக்க நாடுகளான நைஜீரியா, சியராலியோன், லைபீரியா, குனியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கான நுழைவு விசாவை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. எபோலா வைரஸ் பரவுகை காரணமாகவே நான்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வசதியை நிறுத்தி கொள்ள தாம் முடிவு செய்துள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தமானி மூலம் இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சு மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply