blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, August 1, 2014

உயர்தர பரீட்சை; 2 லட்சத்து 96 ஆயிரத்து 313 பரீட்சார்த்திகள்

இந்த முறை கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக 2 லட்சத்து 96 ஆயிரத்து 313 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இந்த பரீட்சைகள், நாடளாவிய ரீதியாகவுள்ள 2 ஆயிரத்து 120 மத்திய நிலையங்களில் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►