blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, June 8, 2014

மோடியின் கருத்துக்களை பின்பற்றுமாறு கோருகிறார் சஜித்

மோடியின் கருத்துக்களை பின்பற்றுமாறு கோருகிறார் சஜித்திஸ்ஸமஹாராம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்டு, இந்தியப் பிரதமர் தமது அமைச்சர்களுக்கு வழங்கிய ஆலோசனைகள் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

இந்தியாவின் புதிய பிரதமர் அவரது புதிய அமைச்சர்களை அழைத்தார். தயவுசெய்து எனது காலில் வீழ்ந்து வணங்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தமது தொகுதிக்கு சென்று மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் அல்லது மக்களின் தேவை நிமிர்த்தம் பாராளுமன்றம் வரவேண்டும் என்று கூறியுள்ளார். பாராளுமன்றத்திற்கு வந்த பின்னர் வெளியில் சுற்றித் திரியாமல் நூலகத்திற்கு சென்று தனது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள என்று கூறியுள்ளார். அவர் பாராளுமன்றக் குழுவுடன் ஒப்பந்தம் ஒன்றை  கைச்சாத்திடவுள்ளார். அந்த ஒப்பந்தத்தில் அரச இரகசியங்களை வெளியிடக்கூடாது என்பது முக்கிய விடயம். அந்த ஒரு விடயத்தை மாத்திரம் எமது நாட்டில் நடைமுறைப்படுத்த முற்படுகின்றனர். இந்த ஒரு விடயத்தை மாத்திரமன்றி அனைத்த விடயங்களையும் கருத்திற் கொண்டால் புத்த சாசனத்தில் கூறப்படுகின்ற நாடொன்றைக் காண முடியும்.


No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►