திருமணம் முடிப்பதாகக் கூறி, பெண்ணொருவரை காட்டுப் பகுதிக்கு அழைத்துச்
சென்று துஷ்பிரயோகம் செய்த நபரை ஹட்டன் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது
செய்துள்ளனர்.
ஹட்டன் பகுதியில் பிரபல பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய குமாஸ்தா பெண்ணை
திருமணம் முடிப்பதாக கூறி அவரை நோர்வூட் காட்டுப் பகுதிக்கு கடந்த 31 ம்
திகதி அழைத்து சென்று; துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அதன் பின்னர் அப்பெண்ணிடமிருந்த தங்க ஆபரணங்களை அபகரித்து, குறித்த பெண்ணை
அந்த இடத்திலேயே கை, கால்களை கட்டி விட்டு குறித்த நபர்
தப்பிச்சென்றுள்ளார்.
அந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரையே ஹட்டன் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை ஹட்டன் நீதவான் அமில ஆரியசேனவின் முன்னிலையில் நேற்று மாலை
ஆஜர்ப்படுத்தியபோது, அவரை, எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்கும்படி நீதவான் உத்திரவிட்டுள்ளார்.
நுவரெலியாவில் வசிக்கும் 31 வயதான மேற்படி சந்தேக நபர் இரண்டு குழந்தைகளின்
தந்தையாவார். மணமகள் தேவை என பத்திரிகைகளுக்கு விளம்பரம் செய்து, அந்த
விளம்பரத்திற்கு பதில் கிடைக்கும் போது தொலைபேசி அழைப்புகளின் ஊடாக
தொடர்புகளை ஏற்படுத்தி இவ்வாறான செயல்களில் அவர் ஈடுபடுவதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, June 6, 2014
விளம்பரங்கள் மூலம் பெண் துஷ்பிரயோகம்; காதல் மன்னன் கைது
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
நீண்ட காலமாக விவாதத்தில் இருந்து வரும் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...

No comments:
Post a Comment
Leave A Reply