திருமணம் முடிப்பதாகக் கூறி, பெண்ணொருவரை காட்டுப் பகுதிக்கு அழைத்துச்
சென்று துஷ்பிரயோகம் செய்த நபரை ஹட்டன் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது
செய்துள்ளனர்.
ஹட்டன் பகுதியில் பிரபல பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய குமாஸ்தா பெண்ணை
திருமணம் முடிப்பதாக கூறி அவரை நோர்வூட் காட்டுப் பகுதிக்கு கடந்த 31 ம்
திகதி அழைத்து சென்று; துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அதன் பின்னர் அப்பெண்ணிடமிருந்த தங்க ஆபரணங்களை அபகரித்து, குறித்த பெண்ணை
அந்த இடத்திலேயே கை, கால்களை கட்டி விட்டு குறித்த நபர்
தப்பிச்சென்றுள்ளார்.
அந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரையே ஹட்டன் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை ஹட்டன் நீதவான் அமில ஆரியசேனவின் முன்னிலையில் நேற்று மாலை
ஆஜர்ப்படுத்தியபோது, அவரை, எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்கும்படி நீதவான் உத்திரவிட்டுள்ளார்.
நுவரெலியாவில் வசிக்கும் 31 வயதான மேற்படி சந்தேக நபர் இரண்டு குழந்தைகளின்
தந்தையாவார். மணமகள் தேவை என பத்திரிகைகளுக்கு விளம்பரம் செய்து, அந்த
விளம்பரத்திற்கு பதில் கிடைக்கும் போது தொலைபேசி அழைப்புகளின் ஊடாக
தொடர்புகளை ஏற்படுத்தி இவ்வாறான செயல்களில் அவர் ஈடுபடுவதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, June 6, 2014
விளம்பரங்கள் மூலம் பெண் துஷ்பிரயோகம்; காதல் மன்னன் கைது
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவற்காடு பகுதியில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்...
-
நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ளார் 93 வயது நானம்மாள் பாட்டி. நானம்மாளின் சொந்த ஊர் ...
-
இலங்கையிலுள்ள தமிழர்களின் அபிலாஷைகளுக்கு தீர்வு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றையே இந்தியா விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
-
திருகோணமலை நகர எல்லைக்குள் செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தக் கூடாதென நகர சபைக் ...

No comments:
Post a Comment
Leave A Reply