எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 5, 2014
மலேசிய விமானம் நடுவானில் எரிந்து இந்திய பெருங்கடலில் விழுந்ததாக பரபரப்பு தகவல்
மலேசியாவில் இருந்து புறப்பட்டு மாயமான விமானம், நடுவானில் தீப்பிடித்து எரிந்து இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வந்த போதிலும், அதைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அவுஸ்திரேலியாவிலிருந்து, 4,500 கி.மீ., தொலைவில், இந்திய பெருங்கடலின் தென் பகுதியில், விமானம் ஒன்று கடலில் வீழ்ந்தது போன்ற சத்தம், கடலுக்கடியில் நிறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கருவி ஒன்றில் பதிவாகி இருப்பதாக, அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அதே சமயம், கேரளாவில் இருந்து தாய்லாந்திற்கு கடலில், சொகுசு படகில் பயணித்த, பிரிட்டனை சேர்ந்த கேதரின் என்ற பெண், ”செம்மஞ்சல் நிறத்தில் தீப்பிடித்த நிலையில், விமானம் ஒன்று கடலில் விழுந்ததை பார்த்தேன். அது விமானமாக இருக்கும் என முதலில் நினைக்கவில்லை. இப்போது அது, மாயமான மலேசிய விமானமாகத் தான் இருக்கும் என கருதுகிறேன்,” என தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
எனினும் இந்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவற்காடு பகுதியில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்...
-
நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ளார் 93 வயது நானம்மாள் பாட்டி. நானம்மாளின் சொந்த ஊர் ...
-
இலங்கையிலுள்ள தமிழர்களின் அபிலாஷைகளுக்கு தீர்வு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றையே இந்தியா விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
-
திருகோணமலை நகர எல்லைக்குள் செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தக் கூடாதென நகர சபைக் ...

No comments:
Post a Comment
Leave A Reply