வவுனியா நகர்ப் பகுதியில் முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய பேரணி பொலிஸாரால் தடுக்கப்பட்டது. இன்று வவுனியா நகரில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் முஸ்லிம் கடைகள் மாத்திரமே பூட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முஸ்லிம் வர்த்தகர்களும் பள்ளிவாசல் தலைவர்களும் நகர்ப் பகுதியில் நடத்தினர்.
இவர்கள் ஊர்வலமாகச் சென்று வவுனியா பஸ் நிலையத்துக்கு அருகில் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்த முற்பட்டனர்.
இதனை அறிந்து அங்கு வந்த வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, 'வவுனியாவில் அனைத்துச் சமுகத்தினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
அந்த அமைதியைக் குழப்ப வேண்டாம். நீங்கள் விரும்பினால் கடைகளைப் பூட்டி அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள்.
பொது இடங்களில் கூடி குழப்பம் விளைவிக்க வேண்டாம்' என்றும் அறிவுறுத்தினார். அத்துடன், அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அவர் பணித்தார். இதனால் அங்கு கூடியவர்கள் கலைந்து சென்றனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 19, 2014
வவுனியாவில் கதைவடைப்பு; கண்டனப் பேரணிக்குப் பொலிஸ் தடை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும்...
-
நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே
-
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னி...
-
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளான மலேசிய விமானம், மாயமானதாக மலேசிய ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply