எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, June 8, 2014
தப்பிச் சென்ற விடுதலைப் புலி சந்தேகநபரை கைது செய்ய ஒத்துழைப்பை கோருகிறது பொலிஸ்
மன்னாரில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபரை கைது செய்வதற்கு ஒத்துழைக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்
மன்னார் மடு பகுதியில் கடந்த நான்காம் திகதி பொலிஸார், சிலரை சோதனைக்கு உட்படுத்தியபோது ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் மற்றுமொருவர் தப்பிச் சென்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மடு பகுதியைச் சேர்ந்த சந்தராசா சௌந்தரநாயகம் என்பவரே கைது செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்து 15 கிலோகிராம் எடையுடைய ரி.என்.ரி ரக வெடி மருந்து கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தப்பிச் சென்ற சந்தேகநபரிடமும் வெடி மருந்து உள்ளமை தெரியவந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறில் நிலங்கம் ஜூட் அன்டனி என்றழைக்கப்படும் குணசேகர முதியான்சேலாகே ஜூட் என்டனி என்பவரே தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இளங்கோ என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயற்பட்டமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறினார்.
மடுவிலிருந்து கனகராயன்குளம் வரையான பகுதியில் யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் குண்டுகளை புதைத்திருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு குண்டுகள் புதைக்கப்பட்டுள்ள இடங்களை நிலங்கம் ஜூட் அன்டனி நன்கு அறிவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் 0112 451 636 அல்லது 0112 451 634 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இன்று அதிகாலை வெளியாகிய கல்வி பொதுத் தாராதர உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் ...
No comments:
Post a Comment
Leave A Reply