
நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்புக்களில் கைது செய்யப்பட்ட 82 தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ள போதிலும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை.
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விரைவாக விடுதலை செய்யப்பட்டதை வரவேற்றுள்ள இராமேஸ்வரம் மீனவர்கள், படகுகள் விடுவிக்கப்படாததால் தமது தொழில் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் விடுவிக்கப்படாமையை கண்டிக்கும் வகையில் இன்று பேரணி மற்றும் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
முகங்களை கறுப்பு துணியால் மறைத்து மீனவர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட 36 மீனவர்களையும் பொறுப்பேற்பதற்கு இந்திய கரையோர பாதுகாப்பு படையினர் தயாராகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 46 தமிழக மீனவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply