
இந்த விவகாரம் குறித்து, காணாமற் போனோர் தொடர்பான ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டு அது குறித்து ஆணைக்குழு சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ள சூழ்நிலையிலேயே மேற்படி உத்தரவை நீதிமன்றம் விடுத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு புதைக்கப்பட்டவர்களின் ஜனஸாக்களைத் தோண்டி எடுத்து இஸ்லாமிய மார்க்க முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு காத்தான்குடி நகரசபை உறுப்பினர் மஜீத் ஏ றவூப் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 22.4.2014 அன்று முறைப்பாடு செய்திருந்தார்.
தனது உறவினர்கள் இருவரும் இதில் கடத்திக் கொல்லப்பட்டு இருக்கின்றனர் எனவும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து களுவாஞ்சிக்குடி பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கொன்றைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே முறைப்பாட்டாளரான காத்தான்குடி நகரசபை உறுப்பினர் மஜீத் ஏ றவூப், தமது உறவினர்களின் ஜனஸாக்கள் புதைக்கப்பட்டவை எனக் கூறப்படும் இடத்தை களுவாஞ்சிகுடிப் பொலிஸாருக்கு அடையாளப்படுத்தினார் என்று கூறப்பட்டது.
பொலிஸார் கேட்டுக்கொண்டதற்கிணங்கள எதிர்வரும் முதலாம் திகதி உரிய இடத்தைத் தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு நீதவான் றியாழ் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply