இந்தியாவின் 14ஆவது பிரதமராகப் பதிவியேற்கவுள்ள நரேந்திர மோடியின்
பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தானும்
பங்கேற்கவுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா இன்று (25) தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து சனிக்கிழமை (24) இரவு வந்த அழைப்பினை
ஏற்று, தான் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, ஜனாதிபதியின் இந்த இந்திய விஜயத்தில் அமைச்சர் ஆறுமுகம்
தொண்டமானும் பங்கேற்கவுள்ளார் என இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத்
காரியவசம் அறிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமராக, நரேந்திர மோடி நாளை(26) மாலை பதவியேற்கவுள்ளார். இந்த
நிகழ்வுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், இலங்கை சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார்.
இதற்காக இன்று (25) மாலை, ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இந்தியா பயணமாகவுள்ளனர்.
இந்த இந்திய விஜயத்தில் பங்கேற்குமாறு வடமாகாண முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரனுக்கு, வெளிவிவகார அமைச்சரினூடாக ஜனாதிபதி அழைப்பு
விடுத்திருந்த போதிலும் அந்த அழைப்பை முதலமைச்சர் விக்னேஷ்வரன்
மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 25, 2014
மோடியின் பதவியேற்பு விழாவில் யாழ். மேயர், தொண்டமான் பங்கேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...

No comments:
Post a Comment
Leave A Reply