மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்து அதன்மூலம் முறையான திட்டங்களை வகுத்து
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும் இது விடயமாக பலசுற்றுப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இது வரை முன்னாள் ஜனாதிபதி உறுதியான பதில் எதையும் தெரிவிக்கவில்லை என்பதுடன் கட்சியின் அடி மட்டம் வரை பேச்சுவார்த்தையை முன்னெடுக்கப்படுமென்றும் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்நாட்களில் மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோரை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரிவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏன் சார் ஏன் இப்டி பண்ரீங்க......
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, February 1, 2015
மஹிந்த புதிய கட்சி ஆரம்பிக்க போறாராம் !!! மற்படியும் ஆரம்பதுல இருந்தா??!!!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
கொழும்பு அல்லாத நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நுவரெலியா, பூண்டுலோயா தோட்டப் பகுதியில் இரவு உணவு உட்கொண்ட பின்னர் திடீர் சுகவீனமுற்ற 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
Leave A Reply