சில தவளைகள் பாய்வதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த நாட்டின் மக்கள் அங்கும் இங்கும் பாயக்கூடியவர்கள் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இப்போது பாருங்கள் இங்கிருந்து சென்ற அனைத்து அவன்களும், அவள்களும் உயிர் அச்சுறுத்தல்” என்றே சொல்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நான்றாக சொல்லிக்கொடுத்து சொல்லப்படுவதனை எம்மால் கண்டுகொள்ள முடிகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் என்னைத் தந்தை எனக் கூறிக்கொண்ட ஒருத்தி உயிர் அச்சுறுத்தல் எனக் கூறி வருவதாகவும் அவளை தாம் ஒருத்தி என கூற முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சிறியவர்கள் பற்றி தாம் பேசப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புவதாகவும் அரசியலைக் கற்றுக்கொள்ளுமாறு சொல்ல வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளம் அரசியல்வாதிகள் கட்சித் தாவுவதனை அனுமதிக்க முடியாது அது பிழையான ஒர் நடவடிக்கையாகும் எனவும், கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு இளம் அரசியல்வாதிகள் கல் எறியக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply