நிந்தவூர் பிரதேச சபையின் புதிய அலுவலகக் கட்டிடம் நேற்று (31)காலை 9.30 மணியவில் சம்பிரதாய பூர்வமாக பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
நீண்காலமாக மிகவும் பழமை வாய்ந்த கட்டிடத்திலிருந்தே நிந்தவூர் பிரதேச சபை இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது.
இப் புதிய முயற்சியினால், இக்காரியாலயத்திற்கு சேவை நாடிவருவோரை வினைத்திறனான முறையில் வரவேற்று சேவையினை வழங்க வசதியளிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேச மக்களாலும் உத்தியோகத்தர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இப்புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று கௌரவ தவிசாளரினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய கட்டிடத்திறப்பு விழாவில் பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.ரி.ஜப்பார் அலி, ஏ.ஏ.நௌஸாட், ஐ.எல்.கலந்தர், எஸ்.எம்.றியாஸ், வை.எல்.சுலைமாலெவ்வை, ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் இந்த மழைகாலத்தில் காரியாலய கடமைகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு இதன் மூலம் வசதியளிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 50 மில்லியன் பெறுமதியான உலக வங்கியின் நிதியளிப்பின் மூலம் தவிசாளர் அவர்களின் பாரிய முயற்சியின கீழ் புற நெகும திட்டத்தினூடாக மிகவும் நவீனமான முறையில் இக்கட்டிடம் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, January 1, 2015
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளவர்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1333 என்ற இலவச தொலைபேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா....
-
காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்த கடும் மழை வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து...

No comments:
Post a Comment
Leave A Reply