அரசாங்க பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை இன்றிலிருந்து ஆரம்பமாகின்றது.
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன இம்மாதம் நடைபெறவுள்ளன.
2014
ஆம் ஆண்டிற்காக உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின்
முதலாவது கட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 12 ஆம்
திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த
காலப்பகுதிக்குள் 15 பாடசாலைகள் முழுமையாக மூடப்படவுள்ளதாக பரீட்சைகள்
ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவிக்கின்றார்.
விடைத்தாள்
மதிப்பீட்டு பணிகளின் பொருட்டு மேலும் 14 பாடசாலைகளின் சில வகுப்பறைகளை
மாத்திரம் மூடுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விடைத்தாள்
மதிப்பீட்டிற்காக முழுமையாக மூடப்படும் 15 பாடசாலைகளும் கல்வி
நடவடிக்கைகளுக்காக செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளன.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, August 1, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கொழும்பு அல்லாத நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அளவுக்கு அதிகமாக கோபப்படுகிறீர்களா? எதற்கும் எப்போதும் கோபப்படுபவரா நீங்கள், கோபம் வந்தால் செய்வதையும், சொல்வதையும் கட்டுப்படுத்த முடியவ...
-
மனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புத...
-
இல்லை என்றால் விட்டுவிடுங்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: இல்லை. இருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடு...

No comments:
Post a Comment
Leave A Reply