செக்றோ ஸ்ரீலங்காவின் இப்தார் நிகழ்வும் உயர் பீட உறுப்பினர்களின்
நியமனமும் 20.07.2014 ஆம் திகதி சாய்ந்தமருது யூத் சென்றரில் நிறுவனத்தின்
ஸ்தாபகத் தலைவரும், உளவள ஆலோசகருமான றினோஸ் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை பிரதி மேயர் முஹமட் பிர்தௌஸ், நிறுவனத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களான மனிதவள உத்தியோகத்தர். கே.எம் றிஸ்வி ,வைத்தியர் எ.எல்.எம் அஜ்வத் மற்றும் யூத் சென்றரின் அதிபர் இஸ்மாயில் லதீப் ,மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் செயலாளர் எம்.எச்.எம் சக்கி ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இதில் 'இஸ்லாத்தின் பார்வையில் சமூகப் பணி' என்ற தலைப்பில் நிறுவனத்தின் மாவடிப்பள்ளிக்கான இணைப்பாளரும், பேருவளை இக்ரா தொழிநுட்ப கல்லூரியின் நிர்வாகச் செயலாளருமான அஷ்ஷெய்க் எ.ஆர்.எம் ரமீஸ் (இஸ்லாஹி) விஷேட உரையாற்றினார்.












No comments:
Post a Comment
Leave A Reply