மினுவங்கொடை ஜனாதிபதி வித்தியாலயத்திலிருந்து வெட்டுக்காயங்களுடன் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று (27) முற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மினுவங்கொடை மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் நேற்று (26) மாலை தனது நண்பர்களை சந்திப்பதாகத் தெரிவித்து, வீட்டிலிருந்து சென்றுள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து மதுபான போத்தல்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து பிரதேசவாசி ஒருவர் தெரிவிக்கையில்;
“மினுவங்கொடை
பகுதியிலேயே மிகவும் பாழடைந்த ஓர் இடமே இது. இந்த இடத்தில் இதற்கு முன்னர்
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இடத்திற்குப் பாதுகாப்பு
நடைமுறையொன்றை செயற்படுத்த வேண்டும். இந்த இடத்தில் காவலரனொன்றை
அமைத்தேனும், பாதுகாப்பு வழங்கினால் மிகவும் சிறந்தாக அமையும்,” என்றார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, May 27, 2014
வெட்டுக்காயங்களுடன் சடலம்; அருகில் மதுபானப் போத்தல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனமும் சாய்ந்தமருது இணையத்தளமும் இணைந்து மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை இன்று நடாத்தியது.
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
-
திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியில் இக்பால் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரி...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
No comments:
Post a Comment
Leave A Reply