இலங்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் தொண்டு
நிறுவனம் ஒன்றின் ஊழியராக இருந்த குர்ரம் ஷேக்கைக் கொன்று, அவருடைய ரஷ்யக்
காதலி கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படுத்தியதாக
குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆறு பேருக்கு எதிரான வழக்கில், சம்பவம் நடந்த
தங்காலையிலுள்ள உல்லாச விடுதியின் மேலாளராக இருந்த தரங்கா பீரிஸ் என்ற பெண்
வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்போது தப்பி ஓடிய குர்ரம் ஷேக்கை விரட்டிச் சென்று அக்கும்பல் தாக்கியதாகவும், பின்னர் குர்ரம் ஷேக் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை தான் கண்டதாகவும் அவர் கூறினார்.
குர்ரம் ஷேக்கை தாக்கிய கும்பலில் இருந்ததாக விதானபத்திரன மற்றும் லஹிரு கெலும் என்பவரை அவர் அடையாளம் காட்டினார்.
குர்ரம் ஷேக்கின் காதலியும் தாக்கப்பட்டு அவரும் தரையில் கிடந்ததை தான் கண்டதாக அரசுதரப்பு சாட்சியான தரங்கா பீரிஸ் தெரிவித்தார்.
உதவிக்கு பொலிசாரை அழைக்க தான் முயன்றபோது லஹிரு கெலும் என்பவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தன்னைத் தடுத்துவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply