இந்த வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று தென்படவுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளிலும் இலங்கையிலும் இந்த சந்திர கிரணம் தென்படவுள்ளது.
பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகி 7.30 வரையில் இந்த கிரகணம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படுவதால் சந்திரகிரகணம் ஏற்படுகிறது.
சந்திர கிரகணத்தன்று சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டு சந்திர கிரகணம் ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், ஒரு பகுதி மட்டும் மறைக்கப்பட்டு கிரகணம் ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த சந்திரகிரணம் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆசியாவின் கிழக்கு பகுதி ஆகியவற்றில் நன்றாக தெரியும் என தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி http://www.hirunews.lk/tamil
No comments:
Post a Comment
Leave A Reply