தன்னை பழிவாங்க சில தரப்பினர் முயற்சிப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அரசியல் காரணிகளுக்காகவே இவ்வாறு தம்மை பழிவாங்க சிலர் முயற்சிப்பதாக அவா் தொிவித்துள்ளார்.
தம்மை கைது செய்வது தொடர்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை நேற்று எடுத்தத் தீர்மானம் குறித்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான சகல தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன. எந்தவிதமான மோசடிகளோ அல்லது ஊழல்களோ இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply