பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்ற விமானத்தில் செயழிலந்த நிலையில் இருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்ற போது டெல்லியில் இருந்து மும்பை, ஐதராபாத் வழியாக ஜித்தா சென்ற விமானத்தின் ஒரு பகுதியில் இருந்து செயல்பாடற்ற நிலையில் இருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜித்தாவில் விமானம் தரையிறக்கப்பட்ட உடன் இத்தகவலை இந்தியா விமான அதிகாரிகள், ஜித்தா பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜித்தா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த விமானம் விரைவில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட உள்ளது.
குறித்த தகவலை அறிந்த பாதுகாப்பு பிரிவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply