இந்திய
பிரதமர் நநேந்திர மோடிக்கு நெருக்கமான நண்பராக கருதப்படும் அமித் ஷா
பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாரதீய ஜனதாக் கட்சி பாரிய வெற்றிபெறுவதற்கு அமித் ஷா பாரிய பங்காற்றியிருந்தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலின் போது உத்தர பிரதேஷத்தில் தாமாக முன்வந்து பாஜகாவை பலப்படுத்து பணிகளை அமித் ஷா ஏற்றிருந்ததுடன் மாநிலத்தின் 80 தொகுதிகளில் 73 இல் பாஜக அமோக வெற்றிபெற்றிருந்தது.
இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷாவை கட்சியின் நாடாளுமன்றக் குழு தெரிவுசெய்துள்ளதாக மத்திய உள்விவகார அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
அமித் ஷாவின் நியமனம் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் மகராஷ்டிரா போன்ற மாநிலங்களிலுள்ள பாஜக ஆதரவாளர்களை ஊக்குவிப்பதாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply