இதற்கான பிரதான நிகழ்வு கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் இன்று மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
ஆரம்பமாக தற்போதைய கடற்படைத் தளபதியான அட்மிரல் ஜயனாத் கொலம்பகே கடற்படைத் தளபதிக்குரிய சம்பிரதாய வாளை புதிய தளபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து ஒய்வு பெற்றுச் செல்லும் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயனாத் கொலம்பகேக்கான விசேட பிரியாவிடை மரியாதை அணிவகுப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து இலங்கையின் 19 வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் கடற்படையின் பிராந்திய கட்டளைத் தளபதிகள் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply