
இவற்றுள் 227 முறைபாடுகள் தொடர்பிலான விசாரணைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் பண்டார தென்னக்கோன் குறிப்பிடுகின்றார்.
பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் 145 முறைபாடுகள் கிடைத்திருந்ததாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
பக்கசார்பாக செயற்பட்டமை தொடர்பில் 86 முறைபாடுகளும், அதிகார துஷ்பிரயோகம் குறித்து 67 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட உடனடி தொலைபேசி அழைப்புப் பிரிவிற்கு வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 1,129 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவற்றுள் 554 முறைப்பாடுகள், பொலிஸார் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை தொடர்பிலேயே பதிவாகியுள்ளன.
பொலிஸார் தொடர்பில் 071 036 10 10 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைபாடுகளை தெரிவிக்க முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply