முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நான்குபேர் படகுமூலம் இன்று அதிகாலை தமிழகத்தின் தனுஸ்கோடியைச் சென்றடைந்தனர்.
முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த அந்தோணி குரூஸ் இவரது மனைவி செல்வி குரூஸ் மற்றும் இவர்களது குழந்தைகளான ரோமேரியா, ரியான்ச் ஆகிய நான்குபேருமே தமிழகம் சென்றுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி பகுதியில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் படகு மூலம் இலங்கையில் இருந்து வந்ததாக அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலோர காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த கடலோர காவல்துறையினர் இலங்கையில் இருந்து வந்தவர்களை முகுந்தராயர் சத்திரம் காவல்துறை சோதனை சாவடிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, தனது மனைவி செல்வி குரூஸ் கிட்னி பாதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் தொழில் மற்றும் வேலை வாயப்பு கிடைக்க மிகவும் சிக்கலாக இருருக்கிறது.
இதனால் மனைவி செல்வி குரூஸ்க்கு சிகிச்சை அளிக்க போதுமான பணம் கிடைக்கவில்லை. எனது உறவினர் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் இருக்கின்றனர்.
அவர்களின் உதவியுடன் இங்கு வந்த சிகிச்சை பெறலாம் என்பதால் தலைமன்னாரில் இருந்து 20 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து படகு மூலம் தனுஸ்கோடிக்கு வந்தோம்.- என்று அந்தோணி குரூஸ் தெரிவித்தார்.
இவர்களிடம் மத்திய, மாநில உளவுப்பிரிவு பொரிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அத்துடன் கடலோர காவல்துறையினர் மண்டபம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, June 21, 2014
முல்லைத்தீவு குடும்பம் படகு மூலம் தமிழகத்துக்குச் சென்றது
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...

No comments:
Post a Comment
Leave A Reply